கப்பல் சிறைவாசம் முடிவு: ஜப்பானுக்கு எதிராகக் கண்டனம்
பயணி ஒருவருக்கு கொரோனா கிருமித்தொற்று பாதிப்பு உறுதியானதை அடுத்து ‘டைமண்ட் பிரின்சஸ்’ உல்லாசக் கப்பலில் இருந்த 3,711 பேரும் கப்பலிலேயே தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். தடுப்புக்காவலுக்கான 14 நாட்கள் முடிவடைந்ததை அடுத்து பயணிகள் கப்பலை விட்டு வெளியேறத் தொடங்கிவிட்டனர். ஆனால் ஜப்பான் தடுப்புக்காவலை மேற்கொண்ட முறையைப் பலரும் சாடி வருகின்றனர்.
பயணிகள் தங்களின் அறைகளிலேயே இருக்கவேண்டும் என்றும் அறையை விட்டு கொஞ்ச நேரத்திற்கு வெளியேறுவோர் முகக்கவசங்கள் மற்றும் கையுறைகள் அணிந்தவாறு நெருக்கமாக நிற்கக்கூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் சில பயணிகள் அருகில் உள்ளவர்களிடம் முகக்கவசம் அணியாமல் பேசினர் என்றும் கப்பல் ஊழியர்கள் அறையில் இருக்காமல் கப்பலின் மற்ற பகுதிகளில் காணப்பட்டனர் என்றும் கூறப்பட்டது. பயணிகள் வெளியேறத் தொடங்கியதை அடுத்து மேலும் 79 புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள் உறுதியாகின. இத்துடன் கப்பலில் 621 சம்பவங்கள் உறுதியாகியுள்ளன.