கிருமித்தொற்றைத் தடுக்க கூடி விவாதித்த அமைச்சர்கள்
21 Feb 2020 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Feb 2020 09:42
கொவிட்-19 கிருமித்தொற்றைத் தடுப்பதற்கான கூட்டு முயற்சிகள் குறித்து சீனா மற்றும் ஆசியான் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் நேற்று லாவோசின் வியன்தியன் நகரில் கூடி விவாதித்தனர். இந்தச் சிறப்புக் கூட்டத்தில் கொரோனா பரவலைத் தடுப்பதற்கான வழிகளை ஆராய்வது தொடர்பிலும் அம்முயற்சிகளில் இணைந்து செயல்படுவது குறித்தும் அந்தத் தலைவர்கள் தங்களது கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். படம்: ராய்ட்டர்ஸ்