வூஹான் மருத்துவமனையில் மற்றொரு மருத்துவர் உயிரிழப்பு
வூஹான் சென்ட்ரல் மருத்துவமனையில் கண் மருத்துவராகப் பணியாற்றி வந்த மருத்துவர் மெய் ஸொங்மிங் கொரோனா கிருமித்தொற்று காரணமாக உயிரிழந்ததாக நேற்று (மார்ச் 3) அந்த மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
57 வயதான அந்த மருத்துவர் கொரோனா கிருமித் தொற்றுகண்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்த மருத்துவமனையில் கண் சிகிச்சைப் பிரிவின் துணை இயக்குநரான டாக்டர் மெய், கொரோனா கிருமித்தொற்று பற்றி முதன் முதலில் எச்சரிக்கை விடுத்த எட்டு மருத்துவர்களில் ஒருவரும் கடந்த மாதம் கிருமித்தொற்றால் உயிரிழந்தவருமான டாக்டர் லி வென்லியாங்கின் நண்பர் என்று தெரிவிக்கப்பட்டது.
ஜனவரி மாத மத்தியில் டாக்டர் மெய்க்கு கிருமித்தொற்று ஏற்பட்டதாகவும் பிப்ரவரி 11 வாக்கில் அவரது உடல்நிலை மோசமடைந்ததாகவும் கூறப்பட்டது.
#வூஹான் #கொரோனா #சீனா #மருத்துவர்