வூஹான் மருத்துவமனையில் மற்றொரு மருத்துவர் உயிரிழப்பு

வூஹான் சென்ட்ரல் மருத்துவமனையில் கண் மருத்துவராகப் பணியாற்றி வந்த மருத்துவர் மெய் ஸொங்மிங் கொரோனா கிருமித்தொற்று காரணமாக உயிரிழந்ததாக நேற்று (மார்ச் 3) அந்த மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. படம்: NYTIMES

வூஹான் சென்ட்ரல் மருத்துவமனையில் கண் மருத்துவராகப் பணியாற்றி வந்த மருத்துவர் மெய் ஸொங்மிங் கொரோனா கிருமித்தொற்று காரணமாக உயிரிழந்ததாக நேற்று (மார்ச் 3) அந்த மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

57 வயதான அந்த மருத்துவர் கொரோனா கிருமித் தொற்றுகண்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்த மருத்துவமனையில் கண் சிகிச்சைப் பிரிவின் துணை இயக்குநரான டாக்டர் மெய், கொரோனா கிருமித்தொற்று பற்றி முதன் முதலில் எச்சரிக்கை விடுத்த எட்டு மருத்துவர்களில் ஒருவரும் கடந்த மாதம் கிருமித்தொற்றால் உயிரிழந்தவருமான டாக்டர் லி வென்லியாங்கின் நண்பர் என்று தெரிவிக்கப்பட்டது.

ஜனவரி மாத மத்தியில் டாக்டர் மெய்க்கு கிருமித்தொற்று ஏற்பட்டதாகவும் பிப்ரவரி 11 வாக்கில் அவரது உடல்நிலை மோசமடைந்ததாகவும் கூறப்பட்டது.

#வூஹான் #கொரோனா #சீனா #மருத்துவர்

வூஹான்
சீனா
மருத்துவர்
மரணம்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!