கொவிட்-19: மருத்துவ சாதனங்களை மியன்மாருக்கு வழங்கிய சிங்கப்பூர்
கொரோனா கிருமித்தொற்றைக் கண்டுபிடிக்க, கிருமிப் பரவலைத் தடுக்க உதவும் மருத்துவ சாதனங்களை மியன்மாருக்கு சிங்கப்பூர் அனுப்பி வைத்துள்ளாது.
கிருமித்தொற்றைக் கண்டறிவதற்கான 3,000 சாதனங்கள், கொவிட்-19 நோய்ப்பரவலைக் கண்டுபிடிக்க இரண்டு பிசிஆர் இயந்திரங்கள் ஆகியவற்றை அனுப்பி வைத்திருப்பதாக வெளியுறவு அமைச்சு இன்று (மார்ச் 4) தெரிவித்தது.
மியன்மார் சுகாதார மற்றும் விளையாட்டு அமைச்சு விடுத்த கோரிக்கையின் பேரில் இவை அனுப்பி வைக்கப்படுவதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
மியன்மாருக்கான சிங்கப்பூர் தூதரான திருவாட்டி வென்னெசா சான், இந்தப் பொருட்களை மியன்மார் தேசிய சுகாதார ஆய்வகத்தின் இயக்குநர் டே டே டின்னிடம் யங்கூன் அனைத்துலக விமான நிலையத்தில் ஒப்படைத்தார்.
கடந்த மாதம் 8, 19 தேதிகளில் சீனாவுக்கும் மருத்துவ உதவிப் பொருட்களை சிங்கப்பூர் அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.
#கொவிட் #கொரோனா #மியன்மார் #சிங்கப்பூர்