கொரோனா கிருமியின் பிடியிலிருந்து உயிர் தப்பிய 103 வயது மூதாட்டி

ஈரான் மருத்துவமனை ஒன்றில் மேற்கொள்ளப்படும் ரத்தப் பரிசோதனை. படம்: ஏஎஃப்பி

ஈரானில் கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்ட 103 வயது மூதாட்டி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியிருக்கிறார்.

முதியோருக்கு கொரோனா கிருமி தொற்றினால் ஆபத்து அதிகம் என்று கூறப்பட்டது. ஆனால் 103 வயது மூதாட்டி உயிர் பிழைத்திருப்பது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

செம்னான் நகரில் பெயர் தெரிவிக்கப்படாத அந்த மூதாட்டிக்கு ஒரு வார காலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதன் பிறகு முழுமையாக குணமடைந்து அவர் வீடு திரும்பினார் என்று செம்னான் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக தலைவர் நேவிட் டனாயியை மேற்கோள்காட்டி இர்னா செய்தி நிறுவனம் கூறியது.

ஈரானில் கொரோனா கிருமித் தொற்றுக்கு ஆளாகி உயிர்பிழைத்த இரண்டாவது மூதாட்டி இவர்.

இதற்கு முன் கெர்மானைச் சேர்ந்த 91 வயது பாட்டி கிருமியால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தார் என்று ஈரானின் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

ஆனால் இருவருக்கும் எத்தகைய சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது பற்றி தெரியவில்லை.

கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி ஈரானில் முதல் நபர் கிருமியால் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு நாடு முழுவதும் பரவி ஏறக்குறைய 1,000 பேர் கிருமிக்கு பலியாகிவிட்டனர்.

#கொரோனா #ஈரான்

கொவிட்-19
கொரோனா
ஈரான்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!