தாய்லாந்தில் நாளை முதல் அவசரகால பிரகடனம்
பேங்காக்: தாய்லாந்தில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவதால் அவசர காலத்தைப் பிரகடனப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. நாளை முதல் அவசரகாலம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தாய்லாந்துப் பிரதமர் பிராயுத் சான் ஓ சா நேற்று அறிவித்தார்.
கொரோனா கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவசரகாலம் அறிவிக்கப்படுவதன் மூலம் ஊரடங்குகள், பயணத் தடை, வெளியேற்றங்கள் ஆகியவற்றுக்கு அரசாங்கம் உத்தரவிடலாம்.
பேங்காக்கில் உள்ள இரவு விடுதிகளிலும் குத்துச்சண்டை அரங்குகளிலும் பலருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது.
கிருமித்தொற்று காரணமாக நேற்று மேலும் மூவர் மரணமடைந்ததாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்தது. மாண்ட மூவரும் தாய்லாந்து நாட்டவர்கள். கிருமித்தொற்றால் தாய்லாந்தில் இதுவரை நான்கு பேர் இறந்துள்ளனர்.