கொவிட்-19 நிதிக்காக இரண்டு மாத ஊதியத்தை விட்டுக்கொடுக்கும் மலேசிய அமைச்சரவை

மலேசியப் பிரதமர் முகைதீன் யாசின் (நடுவில்). படம்: இபிஏ

மலேசியப் பிரதமர் முகைதீன் யாசின், அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்களுக்கான இரண்டு மாத ஊதியத்தை கொவிட்-19 நிதிக்காக வழங்கப்படும் என்று மலேசிய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

பிரதமர் அலுவலகம் இன்று (மார்ச் 26) வியாழக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து முடிவு செய்யப்பட்டது என்றும் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அரசாங்கம் தயாராக இருப்பதை நிரூபிப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்றும் அறிக்கை கூறியது.

மார்ச் 11ஆம் தேதி கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அரசாங்கம் ஏற்படுத்திய முயற்சியாக கொவிட்-19 நிதி அமைகிறது.

நேற்றைய நிலவரப்படி, அரசு மானியங்கள் உட்பட மொத்த நன்கொடை 8.49 மில்லியன் ரிங்கிட் (S$2.83 மி.) இந்நிதியில் சேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா கிருமித்தொற்றால் தென்கிழக்காசியாவிலேயே ஆக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடாக மலேசியா விளங்குகிறது. நேற்று ஒரே நாளில் அந்நாட்டில் 172 கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகின. அவற்றையும் சேர்த்து, மலேசியாவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 1,796ஐ எட்டிவிட்டது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளது.

மலேசியா
கொவிட்-19
முகைதீன் யாசின்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!