கொவிட்-19: 2வது உதவித் திட்டத்திற்கு நிதியிருப்பைப் பயன்படுத்த அதிபர் ஒப்புதல்

சிராங்கூன் கார்டன் வேயில் உள்ள லிங் குவாங் மூத்தோர் இல்லத்திற்கு இம்மாதம் 12ஆம் தேதி வருகையளித்த அதிபர் ஹலிமா யாக்கோப் (இடக்கோடி). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமிப் பரவலைச் சமாளிக்க உதவும் இரண்டாவது உதவித் திட்டத்திற்காக குடியரசின் நிதியிருப்பைப் பயன்படுத்த அதிபர் ஹலிமா யாக்கோப் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளார்.

முன்னெப்போதும் எதிர்பார்க்கப்படாத நெருக்கடிநிலையை சிங்கப்பூர் எதிர்நோக்குவதாக அவர் குறிப்பிட்டார்.

அதிபர் ஹலிமாவின் சார்பில் அவரது உரையை நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின் இன்று நாடாளுமன்றத்தில் வாசித்தார்.

2009ஆம் ஆண்டில் உலக நிதி நெருக்கடிநிலை ஏற்பட்டபோது, நிதியிருப்பிலிருந்து $4.9 பில்லியனைப் பயன்படுத்த அப்போதைய அதிபர் எஸ்.ஆர்.நாதன் ஒப்புதல் அளித்திருந்தார்.

இத்தகைய சூழலில், மீண்டும் இருப்பிலிருந்து நிதியைப் பயன்படுத்த அதிபர் ஹலிமா ஒப்புதல் அளித்துள்ளார்.

2009 நிதி நெருக்கடியைவிடவும் ‘சார்ஸ்’ தொற்றுநோயின்போது ஏற்படுத்திய பொருளியல் பாதிப்புகளைவிடவும் இப்போதுள்ள நிலைமை மேலும் கடுமையானதாகவும் நீண்டகாலம் நீடிக்கக்கூடியதாகவும் இருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

ஹலிமா
வரவுசெலவுத் திட்டம்
கொரோனா
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!