30 மில்லியன் மக்களை தனிமைப்படுத்த இந்தோனீசியா திட்டம்
ஜகார்த்தா: இந்தோனீசியா, தலைநகரில் வசிக்கும் ஏறக்குறைய 30 மில்லியன் மக்களை தனிமைப்படுத்தவும் அதனை சுற்றியுள்ள வட்டாரத்தை மூடவும் திட்டமிட்டுள்ளது.
கொரோனா கிருமி பரவலுக்கு எதிராக இந்த அதிரடி நடவடிக்கையை எடுக்க அது முடிவு செய்துள்ளது.
உலகிலேயே மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகளில் நான்காவது இடத்தில் உள்ள இந்தோனீசியாவில் கிருமியால் 100 பேருக்கு மேல் பலியாகிவிட்டனர்.
நேற்று அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய அதிபர் ஜோக்கோ விடோடோ, கிருமி பரவலின் தொடரை முறியடிக்க தெளிவான நடவடிக்கைகள் தேவை என்றார்.
அதிபர் விடோடோ, கிருமிக்கு எதிராக புதிய கட்டப் போரைத் தொடங்கியிருப்பதாக அவரது பேச்சாளரான ஃபட்ஜ்ரோயல் ராச்மேன் தெரிவித்தார். சுகாதார தனிமை, பாதுகாப்பான இடைவெளி ஆகியவையும் அரசாங்கத்தின் திட்டங் களில் அடங்கும்.
ஆனால் அதிகாரிகள் எந்த வகையில் பாதுகாப்பான இடைவெளியை அமலாக்குவார்கள் என்பது பற்றி அதிபர் விடோடோ விளக்கவில்லை. தலைநகர் ஜகார்த்தாவில் ஏற்கெனவே அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகள், திரையரங்குகள், பொழுதுபோக்கு விடுதிகள் இரு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கடைசி ஆயுதமாக மக்களை தனிமையாக்குவது பற்றி அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அந்தப் பேச்சாளர் சொன்னார்.
கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதி கரித்துள்ளதால் மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவது பற்றி ஆராயப்படுவதாக அவர் சொன்னார்.
ஜகார்த்தாவில் மட்டும் 698 பேருக்கு கிருமி தொற்றியுள்ளது. இதுவரை 122 பேர் கிருமிக்கு பலியாகிவிட்டனர். தலைநகரை முடக்குவதால் கிருமி பரவலைக் கட்டுப் படுத்த முடியும் என்று இந்தோனீசியா அரசு நம்புகிறது.