‘கொரோனா கிருமி நெருக்கடிக்கிடையே செய்தி நிறுவனங்களின் பங்கு மிக முக்கியம்’

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஆசிரியர் திரு வாரன் ஃபெர்னாண்டஸ். படம்: உலகப் பொருளியல் மன்றம்

கொரோனா கொள்ளைநோயைப் பற்றி மக்கள் புரிந்துகொள்ள உதவுவதில் உலகிலுள்ள அனைத்து செய்தி நிறுவனங் களின் பங்கு மிக இன்றியமையாததாகிவிட்டது என்று சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் ஆங்கிலம்/மலாய்/தமிழ் ஊடகப் பிரிவின் முதன்மையாசிரியர் திரு வாரன் ஃபெர்னாண்டஸ் கூறியுள்ளார்.

‘ஆசிய நியூஸ் நெட்வொர்க்’ தலைவராகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் ஆசிரியராகவும் உள்ள திரு ஃபெர்னாண்டஸ், கொவிட்-19 கிருமியால் ஏற்பட்டுள்ள சவால்களை செய்தி நிறுவனங்கள் எவ்வாறு சமாளிக்கின்றன என்ற கேள்விக்கு இவ்வாறு பதிலளித்திருந்தார்.

ஆசிய பசிஃபிக் வட்டாரத்தில் கொவிட்-19 தொடர்பிலான நடவடிக்கைகள் பற்றி உலகப் பொருளியல் மன்றம் மற்றும் உலகச் சுகாதார நிறுவனம் நேற்று முன்தினம் இணைந்து நடத்திய கூட்டத்தின்போது இதைத் தெரிவித்தார்.

“நம் வாசகர்களுக்குக் குழப்பத்தைத் தரக்கூடிய தருணங்கள் இவை. அவர் களுக்குத் தற்போதைய நிலைமையைப் பற்றியும் இது எங்கு இட்டுச் செல்கிறது என்பது பற்றியும் புரிய வைக்க நாம் எடுக்கும் முயற்சி, குறிப்பாக இந்த காலகட்டத்தில் மிக உன்னதமாகக் கருதப்படுகிறது,” என்றார்.

தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும் செய்திகளை மட்டுமே செய்தியாளர்களும் செய்தியாசிரியர்களும் கூறாமல் ஆராய்ந்து, புரிந்துகொண்டு பின்னர் விளக்கவும் முற் படுகின்றனர்.

“தகவல்களை அறிந்துகொள்வதில் ஆர்வ மிகுதி உள்ளது. அடுத்த கட்டம் என்ன என்பதை அறிந்திட மக்கள் முயற்சி செய்கிறார்கள்,” என்றார் திரு ஃபெர்னாண்டஸ்.

வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும் நிறுவனத்தின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் பகிர்ந்துகொண்டார்.

இருப்பினும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஓரளவு வலுவான நிலையில் உள்ளதால் தற்போதைய நெருக்கடியைச் சமாளிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். பொதுச் சேவை தொடர்பான தகவல்களுக்கான எதிர்காலத்தைப் பாதுகாப்பது குறித்து உலக செய்தியாசிரியர்கள் மன்றத்தினரும் ஆராய்ந்து வருவதாக திரு ஃபெர்னாண்டஸ் பேசியிருந்தார்.

கொள்ளைநோய் தொடர்பில் என்ன செய்வது, நம்மை எதிர்காலத்திற்கு எவ்வாறு தயார் செய்துகொள்வது ஆகியவை மிக முக்கியம். தரமான, நம்பகமான தகவல்களும் இக்காலகட்டத்தில் நடந்து வரும் விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல்களும் இச்சூழல்களுக்கு உதவுகின்றன என்று அவர் சொன்னார்.

ஆதாரங்களின் அடிப்படையில் கலந்துரையாடலை ஊக்குவிப்பதிலும் ஊடகத்துறை பங்காற்றுவதாக அவர் பகிர்ந்துகொண்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!