கொரோனா கிருமிக்கு எதிரான தடுப்பு மருந்தை குரங்குகளுக்கு செலுத்தி பரிசோதிக்கும் தாய்லாந்து

தாய்லாந்தில் உள்ள தேசிய குரங்குகள் ஆய்வு நிலையத்தில் புதிய தடுப்பு மருந்து பரிசோதனைக்காக, முதல் கட்டமாக 13 குரங்குகளுக்கு செலுத்தப்பட்டதை மருத்துவர் சுசிந்தா மலைவிடிஜ்னோன்ட் மேற்பார்வையிட்டார். படம்: ஏஎஃப்பி

தாய்லாந்தில் உள்ள தேசிய குரங்குகள் ஆய்வு நிலையத்தில் புதிய தடுப்பு மருந்து பரிசோதனைக்காக, முதல் கட்டமாக 13 குரங்குகளுக்கு செலுத்தப்பட்டதை மருத்துவர் சுசிந்தா மலைவிடிஜ்னோன்ட் மேற்பார்வையிட்டார். படம்: ஏஎஃப்பி

கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிரான, மலிவு விலை தடுப்பு மருந்தை 2021ஆம் ஆண்டுக்குள் கண்டுபிடிக்கும் நம்பிக்கையுடன் செயல்பட்டு வரும் தாய்லாந்து, மக்காவ் வகை குரங்குகளின் மீது அந்தத் தடுப்பு மருந்தைப் பயன்படுத்திப் பரிசோதனையைத் தொடங்கியுள்ளது.

உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் பணியில் சுமார் 100 நிறுவனங்கள் இறங்கியுள்ளன.

அவற்றில் தற்போது எட்டு மருந்துகள் மனிதர்களுக்குச் செலுத்தி பரிசோதிக்கும் நிலையில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.

இந்தப் பரிசோதனைகளில் ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் முன்னணியில் இருக்கின்றனர். சிம்பன்சி குரங்குகளுக்கு ஏற்படக்கூடிய மாறுபட்ட கிருமி ஒன்றுக்கு எதிரான தடுப்பு மருந்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்தை அவர்கள் பரிசோடித்து வருகின்றனர்.

தாய்லாந்தில் உள்ள தேசிய குரங்குகள் ஆய்வு நிலையத்தில் புதிய தடுப்பு மருந்து பரிசோதனைக்காக, முதல் கட்டமாக 13 குரங்குகளுக்கு செலுத்தப்பட்டதை மருத்துவர் சுசிந்தா மலைவிடிஜ்னோன்ட் மேற்பார்வையிட்டார்.

இந்த மருந்து எலிகளுக்குச் செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது வெற்றிகரமாக நிறைவுற்றதையடுத்து, குரங்குகளின்மீது செலுத்தப்படுகிறது.

mRNA எனப்படும் மரபணு தொடர்பான பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த தடுப்பு மருந்து பரிசோதனையை அமெரிக்காவிந் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்துடன் இணைந்து தாய்லாந்து பல்கலைக்கழகம் மேற்கொள்கிறது.

இதற்கு முன்பு பயன்படுத்தாத இதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி Pfizer, Moderna ஆகிய நிறுவனங்களும் புதிய தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சீனாவுக்கு வெளியே, முதன்முதலாக கொரோனா கிருமித்தொற்று கண்டுபிடிக்கப்பட்ட நாடான தாய்லாந்தில் இதுவரை 3,000க்கும் அதிகமானோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்; அங்கு இதுவரை 57 பேர் கொவிட்-19ஆல் உயிரிழந்துள்ளனர்.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online

கொரோனா கிருமி
தடுப்பு மருந்து
தாய்லாந்து
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!