தென்கொரியாவில் கொவிட்-19 நோயாளிகளில் மூவரில் ஒருவரின் நிலையில் முன்னேற்றம்
தென்கொரியாவில் கொரோனா நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோரில் மூன்றில் ஒருவர் 'ரெம்டெசிவிர்' மருந்தை உட்கொண்ட பின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்துவருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
'ஜிலெட் சைன்ச்ஸ்' நிறுவனம் தயாரித்த இந்த மருந்து அந்நோயாளிகளின் முன்னேற்றத்திற்குக் காரணமா அல்லது நோயாளிகளின் நோய் எதிர்ப்பு உள்ளிட்டவையும் இந்த முன்னேற்றத்திற்குப் பங்களித்ததா என்பது குறித்து கூடுதலான ஆய்வு தேவைப்படுவதாக தென்கொரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
கொவிட்-19 நோய்க்கான சிகிச்சைமுறைப் பட்டியலில் தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் 'ரெம்டெசிவிர்' மருந்தைச் சேர்த்துள்ளன.
தென்கொரியாவில் கொரோனா நோயால் இதுவரை 13,479 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பதிவாகியுள்ளன. இதுவரை இந்நோயால் அந்நாட்டில் 289 பேர் உயிரிழந்தனர்.