கொவிட்-19 சோதனைக் கருவியை உருவாக்க புதிய முறை; பல்கலைக்கழகம் கண்டுபிடிப்பு

ஒருவருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று இருக்கிறதா என்பதைக் கண்டறிவதற்காக அவருடைய மூக்கின் உட்பகுதியில் இருந்து சளி மாதிரியை எடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் குச்சி போன்ற கருவியை உருவாக்க சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் புதிய முறையைக் கண்டுபிடித்து இருக்கிறது.

வரும் மாதங்களில் அத்தகைய 40 மில்லியன் கருவிகளை உரு வாக்க பல்கலைக்கழகம் ஆயத்தமாகி வருகிறது. இத்தகைய கருவிகளை அமெரிக்கா, இத்தாலி ஆகிய நாடுகளில் இருந்தும் ஐரோப்பாவின் பல பகுதிகளில் இருந்தும் சிங்கப்பூர் இப்போது பெற்று வருகிறது. கொவிட்-19 பரவல் காரண மாக இவற்றுக்குத் தேவை அதிகமாகி உள்ளது.

இந்தச் சூழலை கருத்தில்கொண்டு பல்கலைக்கழக ஆய்வுக் குழு தெமாசெக் அறநிறுவன உதவியுடன் வேறுபட்ட மூன்று வடிவமைப்புகளை உருவாக்கியது.

இதன்மூலம் சிங்கப்பூர் சொந்தமாக இத்தகைய சாதனங்களை உருவாக்கும் ஆற்றலையும் அறிவையும் பெற்றிருக்கிறது என்று பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர் (புத்தாக்கம் & தொழில்முனைப்பு) பேராசிரியர் ஃபிரட்டி போய் குறிப்பிட்டார்.

முப்பரிமாண தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வளையும் தன்மையுடைய கருவிகளைத் தயாரிக்கும் முதல் ஆசிய நாடு சிங்கப்பூர்தான் என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தப் பேராசிரியர் தலைமையிலான வேறு ஒரு குழு வேறு இரண்டு வடிவமைப்புகளைக் கண்டுபிடித்தது. இவை பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. இவற்றுக்குக் காப்புரிமை கேட்டு மனுச் செய்யப்பட்டு இருக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!