கொவிட்-19 பரவலால் பசிக்குப் பலியாகும் உலக மக்கள்

கொவிட்-19 கிருமிப்பரவலால் உலகமே இதுவரை இல்லாத அளவில் உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்குகிறது.

கிருமித்தொற்றைவிட கிருமித்தொற்றால் ஏற்படும் உணவுத் தட்டுப்பாட்டினால் அதிகம் பேர் பலியாவர் என சில முன்னுரைப்புகள் காட்டுகின்றன. 2020ல் முன்பு முன்னுரைக்கப்பட்ட எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமாக 132 மில்லியன் பேர் பாதிக்கப்படுவர் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை வேறு எந்தக் காலத்திலும் இவ்வாறு அதிகரித்ததில்லை என்றும் கூறப்படுகிறது.

உணவு விநியோக ஓட்டத்தைக் கெடுத்து உலக நாடுகளின் பொருளியலை நாசப்படுத்தும் இந்த கிருமிப்பரவலால் பொருட்களை வாங்குவதற்கான மக்களின் ஆற்றல் மெல்லத் தேய்ந்து வருகிறது.

உணவு உற்பத்தி நிலையாக இருக்கும் நாடுகளில் தற்போதைய சூழலில் நிச்சயமின்மை நிலவுகிறது. வளர்ந்த நாடுகள், வளர்ச்சியடைந்த நாடுகள் என்ற வரையரைகளும் இதில் கரைகின்றன.

அமெரிக்காவின் நியூயார்க்கின் குவீன்ஸ் வட்டாரத்தில் உணவு வங்கியைச் சுற்றி வளைந்து செல்லும் வரிசையில் பலர் எட்டு மணி நேரத்திற்கு மேல் கால்கடுக்க நிற்பது வழக்கமாகிவிட்டதாக புளூம்பர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன், கலிபோர்னியாவில் முட்டைக்கோசுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறதாம். வாஷிங்டனில் பழங்கள் பறிக்கப்படாமல் மரங்களிலேயே மக்கிப் போகின்றன...

ஆப்பிரிக்காவிலுள்ள உகாண்டாவில் வாழைப்பழங்களும் தக்காளிப்பழங்களும் திறந்த சந்தைகளில் விற்கப்படாமல் வெட்ட வெளியில் காய்கின்றன. கப்பல்துறையில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளால் அரிசி மற்றும் இறைச்சி வகைகள் நிறைந்துள்ள கலன்கள் பல்வேறு துறைமுகங்களுக்கு அருகிலுள்ள தண்ணீர் மீது மிதக்கின்றன, எவரும் எடுத்து சாப்பிட விரும்பாத நிலையில்…

“இந்த நெருக்கடியின் வடுக்கள் இனி வரும் பல தலைமுறையினருக்கும் தென்படும்” என்று டிரெக்ஸ்டல் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் திருவாட்டி மரியானா சில்ட்டன் புளூம்பர்க் நிறுவனத்திடம் தெரிவித்தார். “2120ஆம் ஆண்டிலும் இந்த நெருக்கடி பற்றி தொடர்ந்து பேசப்படும்,” என்று அவர் கூறினார்.

உலகிலுள்ள மிகப்பெரிய ஏற்ற தாழ்வுகளை இந்நோய்ப்பரவல் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மில்லியன் கணக்கானோர் தங்களது வேலைகளை இழந்துள்ளனர். அரசாங்கம் கோடிக்கணக்கில் நிதியுதவி வழங்கினாலும் பலரது குடும்பங்களின் வீட்டடுப்புகள் புகைவதில்லை. இவ்வாண்டின் இறுதிக்குள் நாளுக்கு 12,000 பேர் வரை கொவிட்-19 தொடர்பான உணவுப் பற்றாக்குறையினால் இறக்கலாம் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் 78 விழுக்காட்டினருக்கு சத்துள்ள உணவை வாங்குவதற்கான பணம் இல்லை. இந்த எண்ணிக்கை கிருமிப்பரவலால் மேலும் மோசமாகவுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!