பூம்பூம் மாடு மூலம் சென்னையில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்
சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை அண்ணா நகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பகுதிகளில் அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ள இந்த பூம்பூம் மாடுகள் மூலம் பொதுமக்களிடம் கொரோனா கிருமிப் பரவல் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது. பூம்பூம் மாடுகள் குறிசொல்வதற்காகவே இப்படி அலங்கரிக்கப்பட்டு இருக்கும். இந்த மாடுகளிடம் குறி சொல்பவர் கேள்வி கேட்பதும் அக்கேள்விகளுக்கு ஆம் அல்லது இல்லை என்பது போல மாடு தலை ஆட்டி பலன்களைச் சொல்லும்.
மாநிலத்தில் ஆங்காங்கே திருநங்கைகள் நடனம், ஆட்டோவில் அறிவிப்பு, கொரோனா தலைக்கவசம் அணிந்த நிலையில் போலிசார் துண்டு பிரசுரங்களை விநிேயாகம் செய்வது உள்பட பல வழிகளிலும் தமிழக அரசு கொரோனா விழிப் புணர்வு பிரசாரங்களைச் செய்து வருகிறது. படம்: ஏஎஃப்பி