வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த ஐவருக்கு கிருமித்தொற்று

சமூக அளவில் அல்லது வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் தொடர்ந்து 13வது நாளாக எவருக்கும் புதிதாக கிருமித்தொற்று உறுதி செய்யப்படவில்லை. படம்: ஷின் மின்

சிங்கப்பூரில் இன்று (நவம்பர் 23) புதிதாக ஐவருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள்.

புதிதாகப் பாதிக்கப்பட்ட ஐந்து பேரும் சிங்கப்பூருக்கு வந்ததிலிருந்து வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வருவதாகச் சுகாதார அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

சமூக அளவில் அல்லது வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் தொடர்ந்து 13வது நாளாக எவருக்கும் புதிதாக கிருமித்தொற்று உறுதி செய்யப்படவில்லை.

மேற்கூறப்பட்ட ஐவரையும் சேர்த்து சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 58,165 ஆக உள்ளது.

சிங்கப்பூரில் இவ்வாண்டு ஜனவரி 23ஆம் தேதி முதல் கிருமித்தொற்றுச் சம்பவம் உறுதியானதை அடுத்து, சமூக அளவில் 13 நாட்களாக எவருக்கும் தொற்று உறுதி செய்யப்படாதது இதுவே முதன்முறை.

கொவிட்-19
கொரோனா
கிருமித்தொற்று
சிங்கப்பூர்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!