சிங்கப்பூரில் சிக்கித் தவிக்கும் மலேசிய ஊழியர்களுக்கு உணவுக் கூடைகள் வழங்க ஜோகூர் முதல்வர் உறுதி

போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்படும் சிங்கப்பூர் கடற்பாலம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கொவிட்-19 கட்டுப்பாடுகளால் சொந்த நாட்டிற்குத் திரும்ப முடியாமல் சிங்கப்பூரில் இருக்கும் மலேசிய ஊழியர்களுக்கு ஜோகூர் அரசாங்கம் விரைவில் உணவுக் கூடைகளை வழங்கும் என்று அம்மாநில முதல்வர் ஹஸ்னி முகம்மது இன்று (நவம்பர் 26) அறிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மலேசியர்கள் நாடு திரும்ப முடியாமல் சிங்கப்பூரில் இருக்கும் வரை இந்த உணவு உதவி வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

கோத்தா இஸ்கந்தரில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தில் ‘ஜோகூர் வரவுசெலவுத் திட்டம் 2021’ முன்னிட்டு அவர் உரையாற்றியபோது மேற்கொண்ட அறிவிப்பை வெளியிட்டார்.

“மலேசிய ஊழியர்களிடம் உணவுக் கூடைகளை விநியோகிப்பதில் சிங்கப்பூரில் உள்ள மலேசியத் தூதரகத்துடனும் மலேசிய-சிங்கப்பூர் சங்கத்துடனும் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம்,” என்று திரு ஹஸ்னி கூறினார்.

இதற்கிடையே, மலேசிய-சிங்கப்பூர் எல்லை மூடப்பட்டிருப்பதன் காரணமாக சிங்கப்பூரில் சிக்கித் தவிக்கும் மலேசிய ஊழியர்களுக்கு உதவ கூட்டரசு அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்கும் என்று மலேசிய வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுதீன் ஹுசேன் நேற்று முன்தினம் கூறியிருந்தார்.

வெளிநாடுகளில் இருந்து மலேசியர்கள் நாடு திரும்ப அரசாங்கம் தடை விதிக்கவில்லை என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.

மலேசிய ஊழியர்கள்
எல்லை திறப்பு
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!