கொவிட்-19 தொற்றை ஐந்தே நிமிடங்களில் கண்டறியும் புதிய சாதனம்
‘செல் ஐடி’ என்ற உள்ளூர் மருத்துவ தொழில்நுட்ப நிறுவனம், கையடக்க கொவிட்-19 பரிசோதனை சாதனம் ஒன்றை உருவாக்கி இருக்கிறது.
ஒருவரின் உடலில் கொரோனா கிருமி தொற்றி இருக்கிறதா இல்லையா என்பதை பிசிஆர் பரிசோதனை மூலம் அந்தச் சாதனம் ஐந்தே நிமிடங்களில் தெரிவித்துவிடும்.
புதிய சாதனத்தைச் சிறப்பு வல்லுநர் அல்லது சோதனைக்கூடம் தான் பயன்படுத்த முடியும் என்ற அவசியம் இல்லை என்று அந்நிறு வனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஸான்டர் சிம் கூறினார்.
மூக்கில் இருந்து திரவம் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்படும். இந்தப் பரிசோதனை மடிக்கணினியில் இருக்கும் செயலி மூலம் நடக்கும்.
ஆகையால் இதைக் கற்றுக் கொள்ள இரண்டு மணி நேரம் கூடத் தேவையில்லை.
ஆனாலும் மூக்கில் இருந்து திரவத்தை எடுக்கும் ஊழியர் பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும். பரிசோதனை வேகமாக நடக்கும் என்பதால் விமான நிலையத்துக்கு வரும் பயணி, சோதனை முடிவைத் தெரிந்துகொள்ள கொஞ்ச நேரம் காத்திருந்தாலே போதுமானது என்று திரு சிம் விளக்கினார். ‘குயிஸ் பிசிஆர் பயோசிப்’ என்ற அந்தக் கையடக்க சாதனத்தை திரு சிம் இன்று (நவம்பர் 30) செய்தியாளர்களிடம் காட்டினார்.
கொவிட்- 19 பரிசோதனையில் பிசிஆர் சோதனைதான் மிகத்துல்லியமானது. ஆனால் அதற்கு நிபுணத்துவம் அதிகம் தேவை. முடிவு வரவும் சில நாட்கள் ஆகும்.
தேவை இருப்பதால் 30 நிமிடங்களில் முடிவுகளைத் தெரிவித்துவிடும் ஏஆர்டிஎஸ் பரிசோதனைகளையும் சிங்கப்பூர் நடத்தி வருகிறது. இருந்தாலும் இதன் நம்பகத்தன்மை குறைவுதான்.