சிங்கப்பூரில் புதிதாக 13 பேருக்கு கொவிட்-19 நோய்த்தொற்று
7 Dec 2020 20:09
சிங்கப்பூரில் இன்று (டிசம்பர் 7) புதிதாக 13 பேருக்கு கொவிட்-19 நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்தவர்கள்.
அவர்கள் இங்கு வந்தவுடன் வீட்டில் இருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு இன்று பிற்பகல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியிலோ சமூக அளவிலோ எவருக்கும் இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்படவில்லை.
கொவிட்-19
கொரோனா
நோய்த்தொற்று
கிருமித்தொற்று