சிங்கப்பூரில் மேலும் 8 பேருக்கு கொரோனா

புதிதாகப் பாதிக்கப்பட்ட அனைவரும் வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இன்று நண்பகல் நிலவரப்படி சிங்கப்பூரில் மேலும் எட்டு பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.

இதன்மூலம் சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59,956ஆக அதிகரித்துள்ளது.

புதிதாகப் பாதிக்கப்பட்ட எட்டு பேரும் வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள்.

அவர்கள் சிங்கப்பூர் வந்தடைந்ததும் அவர்களுக்கு வீட்டிலேயே இருக்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு கூறியது.

சமூக அளவில் யாருக்கும் பாதிப்பு இல்லை என்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான தங்கு விடுதியில் உள்ளோர் யாருக்கும் கிருமித்தொற்று ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

12 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டதாக நேற்று உறுதி செய்யப்பட்டது.

அவர்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூர் வந்தவர்கள்.

இவர்களில் ஒருவர் சிங்கப்பூர் நிரந்தரவாசி, வொர்க் பாஸ் வைத்திருக்கும் இருவர், வேலை அனுமதி அட்டை வைத்திருக்கும் ஒன்பது பேர் ஆகியோர் அடங்குவர்.

பாதிக்கப்பட்ட சிங்கப்பூர் நிரந்தரவாசியான 46 வயது ஆடவர் இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் திரும்பியதாக தெரிவிக்கப்பட்டது.

நேற்று முன்தினம் அவரிடம் கொவிட்-19 அறிகுறிகள் தென்பட்டதாக சுகாதார அமைச்சு கூறியது.

பாதிக்கப்பட்ட வேலை அனுமதி அட்டை வைத்திருக்கும் ஒன்பது பேரில் மூவர் வெளிநாட்டுப் பணிப்பெண்கள்.

அவர்கள் பங்ளாதேஷ், இந்தோனீசியா, மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள்.

கொவிட்-19
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!