சமூக அளவில் ஒருவர் உட்பட சிங்கப்பூரில் புதிதாக 35 பேருக்கு கிருமித்தொற்று
சிங்கப்பூரில் சமூக அளவில் ஒருவர் உட்பட புதிதாக 35 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு இன்று (ஏப்ரல் 7) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
அவர்கள் அனைவருக்கும் வீட்டில் இருக்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் புதிதாக எவருக்கும் கிருமித்தொற்று பாதிப்பு ஏற்படவில்லை.
சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 60,554 ஆக உயர்ந்துள்ளது.