‘ரெம்டெசிவிா்’ ஊசி மருந்தை வெளிநாடுகளுக்கு அனுப்ப இந்திய அரசு தடை
இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்றுக்கு சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது மொத்தம் 1.1 மில்லியன் போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதனால், சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் ‘ரெம்டெசிவிா்’ ஊசியின் தேவை திடீரென அதிகமாகி உள்ளது. வரும் நாள்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
தற்போதைய கிருமித்தொற்று அதிகரிப்பு சூழலைக் கருத்தில்கொண்டு இந்தியாவில் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்து முன்னேற்றம் ஏற்படும் வரை ‘ரெம்டெசிவிா்’ ஊசி மருந்து மற்றும் ‘ரெம்டெசிவிா் ஆக்டிவ்’ மருந்துப் பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கு இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது.