மலேசியாவில் கிருமித்தொற்று அதிகரிப்பு; கட்டுப்பாடுகள் மறுஆய்வு

மலேசியாவில் நேற்று (ஏப்ரல் 30) 3,788 பேருக்குத் தொற்று உறுதியானது. படம்: ஏஎஃப்பி

மலேசியாவில் கடந்த இரு வாரங்களாக கொவிட்-19 தொற்றியோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்தும் தற்போதைய நடவடிக்கைகள் மறுஆய்வு செய்யப்படவிருக்கின்றன.

மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் இந்தத் தகவலை இன்று (மே 1) தெரிவித்தார். குறிப்பாக, அண்மைக் காலத்தில் கிருமித்தொற்றால் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் நடப்பில் உள்ள கட்டுப்பாடுகள் மறுஆய்வு செய்யப்படும் என்று அவர் கூறினார்.

தலைநகர் கோலாலம்பூரிலும் சிலாங்கூர் மாநிலத்திலும் கடந்த சில நாட்களாக கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

மலேசியாவில் நேற்று (ஏப்ரல் 30) 3,788 பேருக்குத் தொற்று உறுதியானது. இரண்டரை மாதங்களில் பதிவாகியுள்ள ஆக அதிக எண்ணிக்கை இது.

மலேசியாவில் ஏப்ரல் 15ஆம் தேதி, கிருமி தொற்றியோர் எண்ணிக்கை 2,000ஐ கடந்தது. அன்று முதல் நாள்தோறும் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

மலேசியா
கொவிட்-19
கிருமித்தொற்று
முகைதீன் யாசின்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!