இலவச கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ள நீண்ட வரிசையில் மக்கள்

அங் மோ கியோவில் உள்ள வட்டாரப் பரிசோதனை மையத்திற்கு வெளியே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். படம்: சாவ்பாவ்

சிங்கப்பூரில் கொவிட்-19 பரிசோதனை நடத்தும் நான்கு வட்டாரப் பரிசோதனை மையங்களில் இன்று (மே 3) மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

கிருமித்தொற்றுக் குழுமமாக உருவெடுத்துள்ள டான் டோக் செங் மருத்துவமனைக்குச் சென்றவர்களுக்கு இலவசமாக கொவிட்-19 பரிசோதனை வழங்கப்பட்டுவரும் நிலையில், நூற்றுக்கணக்கானோர் வட்டாரப் பரிசோதனை மையங்களுக்கு இன்று சென்றனர்.

டான் டோக் செங் மருத்துவமனையிலிருந்து ஏப்ரல் 18ஆம் தேதி முதல் வீடு திரும்பிய நோயாளிகள் அல்லது அன்றைய தேதியிலிருந்து அந்த மருத்துவமனைக்குச் சென்ற வருகையாளர்களுக்கு இந்த இலவச கொவிட்-19 பரிசோதனை வழங்கப்படுகிறது.

டான் டோக் செங் மருத்துவமனையில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர், ஏப்ரல் 15 முதல் 27 வரை சென்றிருந்த பொது இடங்களில் பணியாற்றியவர்கள் அல்லது அங்கு சென்றவர்களுக்கும் பரிசோதனை வழங்கப்படுகிறது.

கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ள எங்கே செல்லலாம் என்பது குறித்த விவரங்கள் அவர்களுக்கு குறுஞ்செய்தி வழியாக வழங்கப்படும்.

இந்நிலையில், அங் மோ கியோவில் உள்ள வட்டாரப் பரிசோதனை மையத்தில் இன்று (மே 3) 11 மணி நிலவரப்படி, 300 பேருக்கும் அதிகமானோர் வரிசையில் நின்றதாக சீன நாளிதழான சாவ்பாவ் தெரிவித்தது.

கொவிட்-19
பரிசோதனை
சிங்கப்பூர்
கிருமித்தொற்று
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!