டிரேஸ்டுகெதர்: 1,155 பேர் விலகல்
தொடர்புகளின் தடமறிய உதவும் டிரேஸ்டுகெதர் திட்டத்தில் இருந்து விலக அனுமதிக்கும்படியும் தங்களது தரவுகளை சேவையகத்தில் இருந்து நீக்குமாறும் 1,155 பேர் கேட்டுக் கொண்டுள்ளதாக அறிவார்ந்த தேச திட்டத்திற்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
செங்காங் குழுத் தொகுதி எம்.பி. ஹி டிங் ருவின் கேள்விக்கு, பிரதமர் லீ சியன் லூங் சார்பில் எழுத்துமூலம் பதிலளித்த அமைச்சர் விவியன், அந்தப் பயனாளிகளின் விகிதம், ஆறு வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 0.021% என்றும் குறிப்பிட்டார்.
கடந்த மாத இறுதி நிலவரப்படி, 4,923,054 பேர் டிரேஸ்டுகெதர் திட்டத்தில் பங்கெடுத்து வருவதாகவும் இது ஆறு வயதுக்கு மேற்பட்டோரில் 92% என்றும் டாக்டர் விவியன் தெரிவித்தார்.