ஒரே வாரத்தில் பெற்றோரை இழந்த மூன்று பிள்ளைகளுக்கு அமெரிக்கத் தமிழர்கள் உதவி

மறைந்த பெற்றோருடன் அவர்களது பிள்ளைகள். படம்: தமிழக ஊடகம்

தமிழகத்தின் திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த லாரி ஓட்டுநர் ஜெயசீலனும் அவருைடய மனைவியும் ஒரே வாரத்தில் கொரோனா கிருமித் தொற்று பாதிப்பால் உயிரிழந்தனர்.

இதனால், அந்தத் தம்பதியின் மூன்று பிள்ளைகளும் ஆதரவற்றவர்களான நிலையில், அவர்களின் எதிர்கால நலனுக்கு உதவும் வகையில் அமெரிக்காவாழ் தமிழர்கள் நிதி திரட்டி வருகின்றனர்.

மறைந்த ஜெயசீலனின் உறவினரான குமார் ராஜா, அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள கணினி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

அமெரிக்காவில் உள்ள தமது நண்பர்களிடம் அவர் துயரச் செய்தியைப் பகிர்ந்துகொண்டதை அடுத்து, சக நண்பர்களுடன் சேர்ந்து 50,000 அமெரிக்க டாலர் நிதி திரட்டும் முயற்சியை முன்னெ டுத்துள்ளனர்.

பெற்றோரை இழந்து வாடும் பிள்ளைகளின் நலனுக்காக பலரும் நிதியுதவி செய்து வருகின்றனர்.

கொரோனா
பெற்றோர்
நிதியுதவி
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!