கொவிட்-19 சுயபரிசோதனைக் கருவி ஜூன் 16 முதல் சில மருந்தகங்களில் விற்பனை

அபட் நிறுவனத்தின் தயாரிப்பு உட்பட நான்கு கொவிட்-19 சுயபரிசோதனைக் கருவிகளுக்குச் சுகாதார அறிவியல் ஆணையம் இடைக்கால அனுமதி வழங்கி இருக்கிறது. படம்: அபட்

இம்மாதம் 16ஆம் தேதியில் இருந்து கார்டியன், யூனிட்டி, வாட்சன்ஸ் ஆகிய மருந்தகங்களில் கொவிட்-19 சுயபரிசோதனைக் கருவி விற்பனைக்கு வரும் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

“அதிகமான நடவடிக்கைகளை நாம் மீண்டும் தொடங்க விரும்புவதால், கொரோனா பரிசோதனையை விரைந்தும் எளிதிலும் அனைவர்க்கும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டியுள்ளது,” என்று கொவிட்-19 தொற்றுக்கெதிரான அமைச்சுகள்நிலை செய்தியாளர் சந்திப்பின்போது சுகாதார அமைச்சர் ஓங் யி காங் இன்று (ஜூன் 10) தெரிவித்தார்.

அனைவர்க்கும் போதுமான அளவில் விநியோகம் இருப்பதை உறுதிசெய்யும் விதமாக, தொடக்கத்தில் ஒருவர்க்கு அதிகபட்சம் 10 ஆன்டிஜன் விரைவுச் சோதனை (ஏஆர்டி) கருவிகள் மட்டுமே விற்கப்படும்.

படிப்படியாக அவை அதிகமான சில்லறை விற்பனை நிலையங்களில் கிடைக்க வழிவகை செய்யப்படும்.

‘ஏஆர்டி’ பரிசோதனைக் கருவியை எளிதாகவும் சுயமாகவும் பயன்படுத்த முடியும் என்றும் அதன்மூலம் 20 நிமிடங்களுக்குள் முடிவைத் தெரிந்துகொள்ளலாம் என்றும் அமைச்சு குறிப்பிட்டது.

சுயபரிசோதனைக் கருவி
கொவிட்-19
மருந்தகங்கள்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!