12 முதல் 39 வயது வரையுள்ளோர் நாளை முதல் தடுப்பூசி போட பதியலாம்
தேசிய தடுப்பூசித் திட்டத்தின் அடுத்த கட்டமாக 12 வயதிலிருந்து 39 வயது வரையுள்ளோருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. இந்த வயதுப் பிரிவினர் நாளை (ஜூன் 11) முதல் vaccine.gov.sg என்ற இணையத்தளத்தில் தடுப்பூசி போட பெயரைப் பதிவு செய்யலாம்.
தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோரும் ஒருமுறை போட்டுக்கொள்ளும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என ஆலோசனை கூறப்படுகிறது. இதனால் நோயெதிர்ப்பு திறன் மேலும் அதிகரிக்கும் என்பதற்கு சான்று உள்ளது என்று சுகாதார அமைச்சு இன்று (ஜூன் 10) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
முதல் இரு வாரங்கள் சிங்கப்பூரர்கள் பதிவு செய்ய முன்னுரிமை அளிக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் இன்று நடைபெற்ற அமைச்சுகள் நிலை பணிக்குழுக் கூட்டத்தில் கூறினார்.
“இந்த வயதுகளில் ஏறக்குறைய 1.5 மில்லியன் பேர் உள்ளனர். இதுவே தடுப்பூசி போடப்பட வேண்டிய பெரிய வயதுப் பிரிவு,” என்றார் அமைச்சர் ஓங்.