தடுப்பூசி போட்டுக்கொண்டும் கூடுதலானோரை கொவிட்-19 தொற்ற காரணம் என்ன?

சிங்கப்பூரில் தற்போதைய சூழலில் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாவோரில் 44 விழுக்காட்டினர் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். கொரோனா கிருமிக்கு எதிராக பாதுகாப்பு வழங்குவதில் தடுப்பூசி செயல்திறனுடையதாக உள்ளதா என்று கேள்விகள் எழுந்துள்ளன.

எனினும், சிங்கப்பூரில் தொடர்ந்து கூடுதலானோருக்குத் தடுப்பூசி போடப்பட்டு வரும் வேளையில், தடுப்பூசி போட்டுக்கொண்டோரையும் கிருமி தொற்றுவதற்கான சாத்தியம் கூடுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மாறாக, தடுப்பூசிகளின் ஆற்றலை இது பிரதிபலிப்பதில்லை என்பது அவர்களது கருத்து.

குறிப்பிடும்படியாக, தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒருவரைக் கிருமி தொற்றினாலும் அவருக்குக் கடுமையான நோய்ப் பாதிப்பு ஏற்படும் சாத்தியம் குறைவு.

அதே வேளையில், தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மூத்தோர் கிருமித்தொற்றுக்கு ஆளானால், அவர்களுக்குக் கடுமையான உடல்நலப் பாதிப்பு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோரில் குறைவானவர்களுக்கே உயிர்வாயு ஆதரவு அல்லது தீவிர சிகிச்சை தேவைப்படுதாக தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் மூத்த தொற்றுநோய் மருத்துவரான பேராசிரியர் டேல் ஃபிஷர் கூறுகிறார்.

சிங்கப்பூரில் தடுப்பூசி விகிதம் அதிகரித்து இருப்பதே இதற்குக் காரணம் என்றார் அவர். எனவே மேலும் அதிகமானோருக்குத் தடுப்பூசி போடும் முயற்சியைத் தொடர வேண்டும் என்று அவர் அறிவுறுத்துகிறார்.

கொவிட்-19 தடுப்பூசி
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!