கொவிட்-19 தொற்று அதிகரிப்பு: அவசரமில்லாத மருத்துவச் சேவைகளை தள்ளிப்போட மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தல்
சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்று அதிகரித்து வரும் வேளையில் கூடுதலானோருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் அவசரமில்லாத அனைத்து மருத்துவச் சேவைகளையும் தள்ளிப்போட இங்குள்ள மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவமனைகள் தயார்நிலையை உயர்த்த வேண்டும். எடுத்துக்காட்டாக, தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் படுக்கைகளுக்கான தேவை அதிகரித்தால் அதை எதிர்பார்த்து கூடுதலான படுக்கைகளை ஒதுக்க வேண்டும் என்று சிங்கப்பூரின் மருத்துவச் சேவைகள் பிரிவு இயக்குநர் கென்னத் மாக் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 10) கூறியுள்ளார்.