கொவிட்-19 பூஸ்டர் தடுப்பூசிகளுக்கு செப்டம்பர் 14 முதல் பதிய மூத்தோருக்கு அழைப்பு விடுக்கப்படும்
சிங்கப்பூரின் கொவிட்-19 ‘பூஸ்டர்’ தடுப்பூசித் திட்டம் வரும் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 14) தொடங்கவிருக்கிறது.
இது, 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்தோருக்கும் முதியோர் இல்லங்களில் வசிப்போருக்கும் பொருந்தும் என்று சுகாதார அமைச்சு வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 10) தெரிவித்துள்ளது.
நோயெதிர்ப்பாற்றல் குறைவாக உள்ளோரும் இத்திட்டத்தில் அடங்குவர் என்று அமைச்சு கூறியது. இந்தப் பிரிவினருக்கான பூஸ்டர் திட்டத்தை செப்டம்பர் 3ஆம் தேதி அமைச்சு அறிவித்திருந்தது.