டாக்சிகளிலும் தனியார் வாடகை கார்களிலும் திங்கள் முதல் இரு பயணிகள் மட்டும் செல்லலாம்
டாக்சிகளிலும் தனியார் வாடகை கார்களிலும் வரும் திங்கட்கிழமை (செப்டம்பர் 27) முதல் இரு பயணிகள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும்.
இந்த வரம்பு, வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த பயணிகளுக்குப் பொருந்தும்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தோர் ஒன்றாகச் சேர்ந்து பயணம் மேற்கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, இரு பிள்ளைகளுடன் பெற்றோர் ஒன்றாகச் சேர்ந்து பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், கார் பகிர்வுச் சேவைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்படும்.
வெகுவேகமாக உயர்ந்து வரும் கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த திங்கட்கிழமை (செப்டம்பர் 27) முதல் அக்டோபர் 24 வரை சிங்கப்பூரில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுவதை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.