அதிக விமானங்களை இயக்க சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆயத்தம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையின்றிப் பயணம் செய்யும் திட்டம் பல நாடுகளுக்கு விரிவுபடுத்தப்படவுள்ளதால், தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளை சிங்கப்பூருக்கு அழைத்துவர ஏதுவாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அதிகமான விமானங்களை இயக்கத் தயாராகி வருகிறது.

ஆம்ஸ்டர்டாம், பார்சிலோனா, கோபன்ஹேகன், லண்டன், லாஸ் ஏஞ்சலிஸ், மிலான், நியூயார்க், பாரிஸ், ரோம் ஆகிய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு இம்மாதம் 19ஆம் தேதியில் இருந்து தடுப்பூசிப் பயணத்தடத் திட்டத்தின்கீழ் (விடிஎல்) விமானங்களை இயக்க இருப்பதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

தென்கொரியத் தலைநகர் சோலில் இருந்து நவம்பர் 16ஆம் தேதி முதல் அந்நிறுவனம் விமான சேவைகளை வழங்கும்.

இப்போதைக்கு புருணையின் பண்டார் ஸ்ரீ பகவான், ஜெர்மனியின் ஃபிராங்க்ஃபர்ட், மியூனிக் ஆகிய நகரங்களில் இருந்து ‘விடிஎல்’ விமான சேவைகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இயக்கி வருகிறது.

சிங்கப்பூர் ஏர்லைன்சின் மலிவுக் கட்டண விமான சேவை நிறுவனமான ‘ஸ்கூட்’, இம்மாதம் 19ஆம் தேதியில் இருந்து வாரம் மும்முறை சிங்கப்பூர்-பெர்லின் இடையே இடைநில்லா விமானங்களை இயக்க இருக்கிறது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
எஸ்ஐஏ
SIA
ஸ்கூட்
விமானம்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!