இந்தியா பரிந்துரை: 12 வயதுக்குக் குறைந்த சிறார்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி
பாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘கோவேக்சின்’ தடுப்பூசியை, 12 வயதுக்குக் கீழ் உள்ள சிறார்களுக்கு அவசரகாலப் பயன்பாட்டுக்காக இந்தியா பரிந்துரை செய்துள்ளது.
இந்தியாவில் 2 முதல் 18 வயதுப் பிரிவினருக்கு ‘கோவேக்சின்’ தடுப்பூசியைச் செலுத்தி, பரிசோதிக்கப்பட்டதற்கான தரவுகளை மறுஆய்வு செய்தபின், இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 1.4 பில்லியன் மக்கள்தொகையில் 950 மில்லியனுக்கும் மேற்பட்ட தடுப்பூசிகளைப் பெரியவர்களுக்குப் போட்டுள்ள நிலையில், கொரோனா கிருமிக்கு எதிரான பாதுகாப்பைச் சிறுவர்களுக்கும் அளித்திடுவதில் தற்போது இந்தியா கவனம் செலுத்தி வருகிறது.