மலேசிய அமைச்சர் எச்சரிக்கை: தடுப்பூசி போடாதவர்களுக்கு வாழ்க்கை சிரமமாகும்

படம்: இபிஏ

தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுப்பவர்களின் வாழ்க்கையை சிரமமாக்குவோம் என்று மலேசிய சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் எச்சரித்துள்ளார்.

“தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டாம் என்று நீங்கள் எடுத்த முடிவால் சிரமமான வாழ்ககையை எதிர்நோக்க வேண்டியிருக்கும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

தகுதியான மருத்துவச் சான்றிதழ் வைத்துள்ள தடுப்பூசி போடாதவர்களுக்கு இது பொருந்தாது என்றார் அவர்.

“உங்களுக்குத் தடுப்பூசி போடக்கூடாது என்றால் மைசெஜாத்ரா செயலி வழி விலக்கு அளிப்போம். ஆனால் தடுப்பூசி போட வேண்டாம் என்று நீங்கள் விரும்பினால் உங்களுடைய வாழ்க்கை சிரமமாகும்.

“நீங்கள் உணவகத்தில் அமர்ந்து சாப்பிட முடியாது, கடைத்தொகுதிகளுக்குள் நுழைய அனுமதியிருக்காது,” என்று அமைச்சர் கைரி விளக்கினார்.

தடுப்பூசி அனைவருக்கும் கட்டாயமாக்கப்படுமா என்று கேட்டதற்கு, அடுத்த வாரம் தேசிய சோதனை உத்திகள் வெளியிடப்படும்போது, தடுப்பூசி போடாதவர்கள் சொந்தச் செலவில் வாரந்தோறும் கட்டாயம் சோதனைக்குச் செல்வது குறித்த விவரங்கள் இடம்பெற்று இருக்கும் என்று அமைச்சர் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!