விரிவாக்கம் கண்ட தடுப்பூசிப் பயணத்தடத் திட்டம்: முதல் விமானம் நாளை சிங்கப்பூர் வந்திறங்கும்

கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் சிங்கப்பூர் வந்திறங்கியவுடன் இங்கு குறிப்பிட்ட காலத்திற்கு தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டியதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் நாடுகளின் பட்டியலை அண்மையில் சிங்கப்பூர் விரிவுபடுத்தியது.

சிங்கப்பூர் அதன் அடுத்தகட்ட எல்லைத் திறப்பு முயற்சி இது.

அவ்வாறு விரிவுபடுத்தப்பட்ட தடுப்பூசிப் பயணத்தட சிறப்பு ஏற்பாட்டின்கீழ் (Vaccinated Travel Lane) முதல் விமானம் நாளை புதன்கிழமை சிங்கப்பூர் வந்துசேரும்.

நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து புறப்படும் அந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் எஸ்க்யூ329 விமானம், சாங்கி விமான நிலையத்தை நாளை அதிகாலை 5.55 மணிக்கு வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து புறப்படும் விமானம் நாளை மறுதினம் வியாழக்கிழமை அதிகாலை 5.20 மணிக்கு சிங்கப்பூர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vaccinated Travel Lane
விமானம்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!