நியூசிலாந்தில் புதிய உச்சத்தைத் தொட்ட கொவிட்-19 பாதிப்பு

ஆக்லாந்தில் மத்திய வர்த்தக வட்டாரம் வெறிச்சோடி காணப்படுகிறது. படம்: ராய்ட்டர்ஸ்

வெலிங்டன்: நியூசிலாந்தில் இன்று செவ்வாய்க்கிழமை கொவிட்-19 பாதிப்பு புதிய உச்சத்தைத் தொட்டது.

கடுமையான முடக்கநிலையும் எல்லைக் கட்டுப்பாடுகளும் நடப்பில் உள்ளபோதும், வேகமாகப் பரவக்கூடிய டெல்டா வகை கிருமித்தொற்று காரணமாக அந்நாட்டின் ஆக்லாந்து நகரத்திலும் அண்டை நகரத்திலும் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை பெருகி வருகிறது.

இதற்கிடையே, ஆக்லாந்தில் மேலும் இரண்டு வாரத்திற்கு முடக்கநிலை நீட்டிக்கப்படுவதாக திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது.

நேற்று அங்கு பதிவான 94 தொற்றுப் பாதிப்புகளில், 87 ஆக்லாந்தில் பதிவானவை.

கட்டுப்பாடுகளை மீறுவோரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுமே கிருமி பரவலுக்குக் காரணம் என்று நியூசிலாந்து அதிகாரிகள் சாடுகின்றனர்.

அனைவரும் கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் என்று நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் கேட்டுக்கொண்டுள்ளார்.

அங்கு இதுவரை 67 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொள்வோர் எண்ணிக்கையை அதிகரித்து, கொவிட்-19 கிருமித்தொற்றை நிரந்தர நோயாகக் கையாள அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

நியூசிலாந்து
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!