கொவிட்-19 தொற்று உயர்வு விகிதம் 2வது நாளாக ஒன்றுக்குக்கீழ் பதிவானது

சிங்கப்பூரில் வாராந்திர கொவிட்-19 தொற்று உயர்வு விகிதம் தொடர்ந்து இரண்டாவது நாளாக, நேற்று வியாழக்கிழமை (நவம்பர் 4) 1க்குக் கீழ் பதிவானது.

தொற்று விகிதம் நேற்று 0.93ஆகக் குறைந்தது. புதன்கிழமை அது 0.96ஆக இருந்தது என்று சுகாதார அமைச்சு நேற்றிரவு தெரிவித்தது.

இதற்கிடையே, கொவிட்-19 தொற்று காரணமாக மேலும் 17 பேர் உயிரிழந்துவிட்டனர். அவர்கள் 55 முதல் 93 வயதிற்குட்பட்டவர்கள். அவர்கள் அனைவருக்கும் பல்வேறு மருத்துவப் பிரச்சினைகள் இருந்தன.

சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்றால் இதுவரை 459 பேர் உயிரிழந்துவிட்டனர்.

இந்நிலையில், புதிதாக 3,003 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சமூகத்தில் 2,780 பேரும் தங்குவிடுதிகளில் 220 வெளிநாட்டு ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்களில் மூவருக்கும் தொற்று உறுதியானது.

சிங்கப்பூரில் இதுவரை கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 210,978ஆக உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!