மலேசியாவில் நான்காவது கிருமித்தொற்று அலை: நிபுணர்கள் எச்சரிக்கை

இன்னொரு கொரோனா அலை உருவானால் அதனை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாக மலேசிய சுகாதாரத் துணை அமைச்சர் ஏரன் அகோ டகாங் கூறியிருக்கிறார். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மையில் மலாக்காவில் நடந்த சட்டமன்றத் தேர்தலால் மலேசியாவில் கொவிட்-19 நான்காவது அலை உருவாக வாய்ப்புள்ளதாகச் சுகாதார வல்லுநர்கள் எச்சரித்து உள்ளனர்.

அப்படி நான்காவது அலை உருவானால், ‘டெல்டா’ போன்ற உருமாறிய கிருமிகளாலேயே அதிக பாதிப்பு ஏற்படலாம் என்றும் அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும் இறப்பு விகிதமும் கூடலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மலாக்காவில் நடந்த சட்டமன்றத் தேர்தல் எதிரொலியாக இன்னொரு கொரோனா அலை உருவானால் அதனை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாக மலேசிய சுகாதாரத் துணை அமைச்சர் ஏரன் அகோ டகாங் கூறியிருக்கிறார். தேர்தல் முடிந்து 10-14 நாள்களுக்குப் பிறகே விளைவுகள் தெரியவரும் என்று அவர் சொன்னார்.

இதனிடையே, டிசம்பர் 18ஆம் தேதி சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!