விலை குறைந்த கொவிட்-19 மாத்திரையைத் தயாரிக்க 19 இந்திய நிறுவனங்களுக்கு உரிமம்

ஃபைசர் நிறுவனம் தயாரிக்கும் கொவிட்-19 மாத்திரையான பேக்ஸ்பிளோவிட் மாத்திரையை குறைந்த செலவில்   தயாரிக்க 19 இந்திய நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. படம்: ராய்ட்டர்ஸ்

ஃபைசர் நிறுவனம் தயாரிக்கும் கொவிட்-19 மாத்திரையான பேக்ஸ்பிளோவிட் மாத்திரையை குறைந்த செலவில் தயாரிக்க 19 இந்திய நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

பேக்ஸ்லோவிட் மாத்திரையைப் போலவே செயல்படும் மாத்திரைகளை அவை தயாரிக்கும்.

ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் ஆதரவு பெற்ற எம்பிபி எனும் அமைப்புடன் இதுகுறித்து ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 35 நிறுவனங்களுக்கு எம்பிபி உரிமம் வழங்கியது.

விலை குறைந்த அந்த மாத்திரைகள் 95 உலக நாடுகளின் மக்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும்.

ஏற்கெனவே ‘மெர்க் அண்ட் கோ’ நிறுவனம் உருவாக்கி இருக்கும் கொவிட்-19 மாத்திரையைக் குறைந்த செலவில் தயாரிக்க உடன்பாடு எட்டப்பட்டது.

ஆனால் அது தயாரிக்கும் மோல்னுபிரவிர் மாத்திரையைவிட ஃபைசர் தயாரிக்கும் பேக்ஸ்லோவிட் மாத்திரை சிறப்பாக செயல்படுகின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன.

மெர்க், ஃபைசர் நிறுவனங்கள் அவற்றின் மருந்து காப்புரிமையை விட்டுக்கொடுப்பது அரிதான ஒன்று.

ஆனால் குறிப்பிட்ட காலத்துக்கு ஃபைசர் இந்த விலை குறைந்த மாத்திரைகளின் விற்பனையிலிருந்து காப்புரிமைத் தொகை வாங்காது.

கொவிட்-19 தொற்றை உலக சுகாதார அமைப்பு பொதுச் சுகாதார அவசரநிலை என்று வகைப்படுத்தி இருக்கும் வரை ஃபைசர் காப்புரிமைகள் பெறாது.

#கொரோனாதொற்று #கொவிட்-19 #covid19
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!