விலை குறைந்த கொவிட்-19 மாத்திரையைத் தயாரிக்க 19 இந்திய நிறுவனங்களுக்கு உரிமம்
ஃபைசர் நிறுவனம் தயாரிக்கும் கொவிட்-19 மாத்திரையான பேக்ஸ்பிளோவிட் மாத்திரையை குறைந்த செலவில் தயாரிக்க 19 இந்திய நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
பேக்ஸ்லோவிட் மாத்திரையைப் போலவே செயல்படும் மாத்திரைகளை அவை தயாரிக்கும்.
ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் ஆதரவு பெற்ற எம்பிபி எனும் அமைப்புடன் இதுகுறித்து ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 35 நிறுவனங்களுக்கு எம்பிபி உரிமம் வழங்கியது.
விலை குறைந்த அந்த மாத்திரைகள் 95 உலக நாடுகளின் மக்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும்.
ஏற்கெனவே ‘மெர்க் அண்ட் கோ’ நிறுவனம் உருவாக்கி இருக்கும் கொவிட்-19 மாத்திரையைக் குறைந்த செலவில் தயாரிக்க உடன்பாடு எட்டப்பட்டது.
ஆனால் அது தயாரிக்கும் மோல்னுபிரவிர் மாத்திரையைவிட ஃபைசர் தயாரிக்கும் பேக்ஸ்லோவிட் மாத்திரை சிறப்பாக செயல்படுகின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன.
மெர்க், ஃபைசர் நிறுவனங்கள் அவற்றின் மருந்து காப்புரிமையை விட்டுக்கொடுப்பது அரிதான ஒன்று.
ஆனால் குறிப்பிட்ட காலத்துக்கு ஃபைசர் இந்த விலை குறைந்த மாத்திரைகளின் விற்பனையிலிருந்து காப்புரிமைத் தொகை வாங்காது.
கொவிட்-19 தொற்றை உலக சுகாதார அமைப்பு பொதுச் சுகாதார அவசரநிலை என்று வகைப்படுத்தி இருக்கும் வரை ஃபைசர் காப்புரிமைகள் பெறாது.