ஃபைசரின் மாத்திரையே கொரோனாவுக்கு சிறந்தது என்கிறது உலக சுகாதார அமைப்பு
ஃபைசர் நிறுவனத்தின் கொவிட்-19 மாத்திரை, கடும் நோய் அபாயம் அதிகமுள்ளவர்களுக்கு ஆகச் சிறந்தது என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.
பேக்ஸ்லோவிட் என்கிற அந்த மாத்திரையின் முதல்கட்ட பரிசோதனைகளை ஆராய்ந்த பின்னர் ஐக்கிய நாட்டு நிறுவனம் அந்த முடிவுக்கு வந்தது.
மருத்துவமனை சிகிச்சைக்கான தேவையை பேக்ஸ்லோவிட் மாத்திரை 85 விழுக்காடு குறைப்பதாக 3,000 பேரிடம் நடத்தப்பட்ட அந்தப் பரிசோதனைகள் காட்டின.
தற்போதுள்ள கொவிட்-19 மாத்திரைகளில் பேக்ஸ்லோவிட் தான் சிறந்தது என்று உலக சுகாதார அமைப்பு கூறியது.
எனினும் பேக்ஸ்லோவிட் மாத்திரையைப் பரவலாகப் பயன்படுத்துவதில் சவால்கள் உள்ளன.
கிருமித்தொற்றிய சில நாள்களிலேயே அதை உட்கொள்ள வேண்டும். பெக்ஸ்லோவிட் மாத்திரையை மற்ற பல மருந்துகளுடன் சேர்த்து சாப்பிடும்போது சிக்கல்கள் ஏற்படக்கூடும்.
கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார், குழந்தைகள் ஆகியவர்கள் மத்தியில் பெக்ஸ்லோவிட் பரிசோதிக்கப்படவில்லை.
இதுபோன்ற காரணங்களால், பேக்ஸ்லோவிட் மாத்திரை சந்தையில் உள்ளபோதும் அதற்கான தேவை அவ்வளவு அதிகமாக இல்லை.