டிரேஸ்டுகெதர் கருவிகள் தேவையில்லை என்று நினைத்து தூக்கி எறிய வேண்டாம்
பெரும்பாலான இடங்களில் ‘சேஃப்என்ட்ரி’ செயலியில் பதிவு செய்யத் தேவையில்லைதான்.
அதனால் உங்கள் டிரேஸ்டுகெதர் கருவிகள் இனி எதற்கு என்று நினைத்து அவற்றைத் தூக்கி எறிய வேண்டாம்.
பொதுமக்களும் வர்த்தகர்களும் தற்போதைக்கு அவற்றை வைத்திருக்கவேண்டும் என்று அரசாங்க தொழில்நுட்ப அமைப்பான ‘கவ்டெக்’ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியது.
வழக்கறிஞர்களும் பொதுமக்களுக்கு அதே ஆலோசனையைக் கூறியுள்ளனர்.
வர்த்தகர்களும் ‘சேஃப்என்ட்ரி’ நுழைவாயில்களை எறியாமல் இருக்கவேண்டும் என்று வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.
அவை அரசாங்கத்துக்குச் சொந்தமான பொருள்கள் என்பதால் தற்போதைக்கு அவற்றை எறிவது தற்போதைக்குக் குற்றமாக வகைப்படுத்தப்படலாம்.
கவலைக்குரிய கொவிட்-19 கிருமித் திரிவு ஏதேனும் பரவினால், மீண்டும் ‘சேஃப்என்ட்ரி’ முறையில் பதிந்துகொள்வதற்கு டிரேஸ்டுகெதர் கருவிகள் தேவைப்படும் என்று வழக்கறிஞர்கள் கூறினர்.
அதே நேரத்தில் டிரேஸ்டுகெதர் சாதனங்கள், ‘சேஃப்என்ட்ரி’ நுழைவாயில்கள் ஆகியவை தேவைப்படாமல் போனப் பிறகு அவற்றை எவ்வாறு அப்புறப்படுத்துவது அல்லது மறுபயனீடு செய்வது என்பது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.