4-7 மாதங்களுக்கு முன்பு கொவிட்-19 தொற்று ஏற்பட்டவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்பட 3% வாய்ப்பு
கிட்டத்தட்ட நான்கு முதல் ஏழு மாதங்களுக்கு முன்பாக கொவிட்-19 தொற்று ஏற்பட்டவர்களில் 3 விழுக்காட்டினருக்கு அந்நோய் மீண்டும் தொற்றும் சாத்தியம் உள்ளது.
இதற்கிடையே கடந்த ஆண்டின் டெல்டா திரிபு கொரோனா நோய் தொற்றியவர்களில் 20 விழுக்காட்டினருக்கு மீண்டும் அந்நோய் தொற்றும் வாய்ப்பு உள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று ( ஆகஸ்ட் 1) தஞ்சோங்க் பகார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் பெரேரா கேட்ட கேள்விக்கு சுகாதார அமைச்சர் ஓங் யி காங் பதிலளித்தார்.
கடந்த மூன்று மாதங்களில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் அந்நோய் வரும் சாத்தியம் மிகவும் அரிது என்றும் அவர் சொன்னார்.