உலகின் புகழ்பெற்ற ஆடையலங்கார நிறுவனமான ஷெனேல் (Chanel), இந்தியாவில் பிறந்து வளர்ந்த லீனா நாயர் என்பவரை அதன் உலகளாவிய தலைமை நிர்வாகியாக நியமித்திருக்கிறது.
பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற திருவாட்டி லீனாவுக்கு 52 வயது ஆகிறது.
யூனிலீவர் நிறுவனத்தில் பயிற்சி ஊழியராகப் பணியாற்றத் தொடங்கிய திருவாட்டி லீனா, முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக அதே நிறுவனத்தில் படிப்படியாக முன்னேறியவர்.
யூனிலீவரின் முதல் பெண் தலைமை மனிதவள அதிகாரியாக திருவாட்டி லீனா பொறுப்பு வகித்தார். அந்த பொறுப்பை ஏற்ற ஆக இளையவரும் அவர்தான்.
ஆடம்பர ஆடைகள், விலை உயர்ந்த கைப்பைகள், அதன் ஷெனேல் நம்பர் 5 போன்றவற்றுக்குப் பேர்போனது ஷெனேல் நிறுவனம்.
ஆடை அலங்காரத் துறையில் தனிப்புகழ் பெற்ற கேப்ரியேல் கொக்கோ ஷெனேல் , 1910ஆம் ஆண்டு பிரான்சில் ஷெனேல் நிறுவனத்தைத் தொடங்கினார்.
ஆடையலங்காரத் துறையைச் சேராத ஒருவரை ஷெனேல் நிறுவனம் இத்தகைய பதவிக்குத் தெரிவு செய்வது அரிதாகும்.