அமெரிக்காவின் மத்திய உளவுத்துறை (சிஐஏ) இந்தியாவில் பிறந்த ஒருவரை அதன் முதல் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக நியமித்திருக்கிறது.
அமெரிக்க மத்திய உளவுத்துறை தலைமை தொழில்நுட்ப அதிகாரி என்ற பதவியை முதன்முறையாக உருவாக்கி திரு நந்த் முல்சந்தானி என்பவரை அதில் நியமித்தது.
திரு முல்சந்தானி அமெரிக்க தற்காப்பு அமைச்சின் கூட்டு செயற்கை நுண்ணறிவுக்கான கூட்டு நிலையத்தின் தற்காலிக இயக்குநராக பணியாற்றினார்.
அங்கு அவர் செயற்கை நுண்ணறிவின் அடுத்த கட்ட முயற்சிகளை வழிநடத்தி வந்ததாக அமெரிக்க மத்திய உளவுத்துறை கூறியது.
இந்தியாவில் பிறந்த நந்த் முல்சந்தானி புதுடெல்லியில் பள்ளிப்படிப்பை படித்தவர்.
பின்னர் அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் அவர் இளநிலைப் பட்டம் பெற்றார்.
அமெரிக்காவின் சில்லிக்கான் பள்ளத்தாக்கில் தொழில்நுட்ப நல்லுவராக 25 ஆண்டுகளுக்கு மேலாக அவர் பணியாற்றினார்.
பல்வேறு புதிய தொழில்நுட்ப நிறுவனங்களை அவர் தொடங்கியிருக்கிறார்.
திரு முல்சந்தானி அமெரிக்க மத்திய உளவுத்துறையின் பணியை மேம்படுத்த நாளைய புத்தாக்கங்களை பயன்படுத்துவார் என்று மத்திய உளவுத்துறை அமைப்பு கூறியது.
அமெரிக்க மத்திய உளவுத்துறை தலைமை தொழில்நுட்ப அதிகாரி என்ற பதவியை முதன்முறையாக உருவாக்கியிருக்கிறது.