திமுகவில் இன்று இணைய இருந்த எம்எல்ஏ அய்யப்பன் வீட்டில் சோதனை 

கடலூர்: திமுகவில் இன்று வியாழக்கிழமை இணை வதற்காகத் திட்டமிட்டிருந்த கடலூர் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ கோ. ஐயப்பன் வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஐயப்பன் கடந்த 2011ஆம் ஆண்டு திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக அவர் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக வில் இருந்து விலகி இன்று திமுகவில் இணைய திட்ட மிட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஐயப்பனின் வீட்டில் திடீரென்று சோதனை நடத்தினர்.
இதுகுறித்து ஐயப்பன் கூறியபோது, "எனது ஆதர வாளர்களுடன் நான் வேறு கட்சிக்குப் போவதை பொறுத்துக்கொள்ள முடியாத சிலர், எங்கள் வீட்டில் நிறைய பணம் இருப்பதாகவும் தேர்த லுக்கு அந்தப் பணத்தைப் பயன்படுத்த போவதாகவும் பொய்யான தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் இன்றைக்கு அதிகாரிகள் வந்து எனது வீட்டில் சோதனை நடத்தி விட்டு, எதுவுமே சிக்கவில்லை என கூறிச் சென்றுள்ளனர்," என்று அவர் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!