நீலகிரி: நீலகிரியில் உள்ள ஆதிவாசி கிராம மக்கள் இரவு 10 மணிக்கு மேல் பணி முடிந்து வீட்டுக்குச் செல்லும்போது 'டார்ச்லைட்' பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் தீப்பந் தம் ஏந்திச் செல்கின்றனர். இவர் கள் தேர்தல் கெடுபிடிகளைத் தளர்த்தவேண்டும் என வலி யுறுத்தியுள்ளனர்.
விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் 'டார்ச்லைட்' கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சின்னமாக இருப்பதால் அதை இரவு 10 மணிக்கு மேல் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். எனவே, இவர்கள் தீப்பந்தம் ஏந்திக்கொண்டு வனப் பகுதிகளைக் கடந்து வீட்டுக்கு வருகின்றனர்.
இதனால் வனப் பகுதியில் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள் ளது. எனவே, இரவு 10 மணிக்கு மேல் ஆதிவாசி கிராமங்களில் உள்ளவர்கள், பிற இடங்களுக்கு 'டார்ச்லைட்'டுடன் செல்பவர்க ளிடம் தேர்தல் அதிகாரிகள் கெடுபிடி காட்டாமல் இருக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் 55% வனப் பகுதிகளை உள்ளடக்கியது. இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் அதிக அள வில் உள்ளன. இங்குள்ள வனப் பகுதியை ஒட்டியுள்ள கிராமங் களில் படகர், தோடர், இருளர், குரும்பர், பனியர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் தேயி லைத் தோட்டங்கள், தேயிலைத் தொழிற்சாலைகள், விவசாய கூலிகளாக உள்ளனர்.
இவர்கள் தேயிலை எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக் குச் சென்றுவிட்டு இரவு 10 மணிக்கு மேல்தான் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டிய சூழலில் உள்ளனர். சிலர் கேரட் உள்ளிட்ட காய்கறி அறுவடைக் காக அதிகாலையிலேயே பணிக் குச் செல்லவேண்டிய நிலையில் உள்ளனர். இவர்கள் செல்லும் வழியில் மின்வசதி இல்லாததால் இருட்டில் 'டார்ச்லைட்'டை பயன் படுத்தியே வனப்பகுதி வழியாக வீடுகளுக்குத் திரும்பவேண்டிய நிலை இருந்து வருகிறது.
‘டார்ச்’சுக்கு பதில் தீப்பந்தம் ஏந்தும் தொழிலாளர்கள்
12 Apr 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Apr 2019 10:16
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!