திருவனந்தபுரம்: கேரளாவின் வட்டகரா தொகுதிக்குட்பட்ட பனூர் வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காக காத்திருந்த விஜயி எனும் 65 வயது மூதாட்டி மயங்கி கீழே விழுந்தார். மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டார்.
வடசேரிக்கராவில் உள்ள வாக்குச்சாவடியில் காத்திருந்த 80 வயது முதியவர் ஒருவர் மயங்கி விழுந்து இறந்தார். வாக்களித்துவிட்டு வீடு திரும்பிய 72 வயது முதியவரும் மூச்சுவிட சிரமப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.