புதுடெல்லி: 'பிஎம். நரேந்திர மோடி' திரைப்படம் வெளியிடு வதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தது. தேர்தல் முடியும் வரை திரையிடக்கூடாது என்றும் ஆணை யம் உத்தரவிட்டது. இந்த நிலையில் திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மேலும் திரைப்படத்தில் அரசியல் பிரசாரம் கிடையாது என்றும் உத்வேகம் அளிக்கும் காட்சிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன என்றும் தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து உச்ச நீதிமன்றம் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தை தேர்தல் ஆணையத்திற்கு திரையிட்டுக் காட்ட வேண்டும் என்றும் அதன் பிறகு ஆணையம் தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் இந்தத் திரைப்படத்தை பார்த்த பிறகு தேர்தல் ஆணையம் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தேர்தல் ஆணையத்தின் முடிவில் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் 'பிஎம். நரேந்திர மோடி' படத்துக்கு தேர்தல் ஆணையம் விதித்த தடை நீடிக்கிறது.