கரூர்: கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம்; திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர்; திருச்சி மாவட்டம் மணப்பாறை; புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை உள்ளிட்ட 6 தொகுதிகளில் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தளவாபாளையம் குமாரசாமி பொறியியல் கல்லூரியில் ஓர் அறையில் உள்ளன.
அங்கு பிரத்தியேகப் படச்சாதனம் இயங்கவில்லை என்றும் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி கவலை தெரிவித்தார்.